கவிதையின் பாடுபொருள்
மனிதர்கள் தங்களுடைய நிஜ முகத்தை தொலைக்க முகநூல் ஒரு
காரணமாக உள்ளது.
விமர்சனம்
மனிதர்கள் நாள்முழுவதும் தங்களுடைய நேரங்களை முகநூலில் வீணாக
செலவழிக்கின்றனர். தன் அருகில் இருப்பவரை நிமிர்ந்து பார்க்கக் கூட
நேரமில்லாதவர்களாக முகநூலில் மூழ்கி கிடக்கின்றனர்.
இன்றைய சூழ்நிலை
இன்றைய இளைஞர்கள் எப்பொழுதும் முகநூலிலேயே தங்களை
அடிமையாக்கிக் கொள்கின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்
நஞ்சு என்பதை இவர்கள் எண்ணுவதில்லை. இன்றைய இளைஞர்கள்
முகநூலில் காணப்படும் நன்மைகளையும் தீமைகளையும் அறிந்து
செயல்படுவதில்லை. விலை மதிப்பில்லாத இன்றைய இளைஞர்களின்
நேரங்கள் இன்று வீணாய்ப் போகின்றன. நேரங்கள் பொன் போன்றது
என்பதை இவர்கள் உணரவில்லை.