Thursday, October 6, 2016

முகம் தொலைத்தல் - கவிக்குயில்.ஆர்.எஸ்.கலா



கவிதையின் பாடுபொருள்
மனிதர்கள் தங்களுடைய நிஜ முகத்தை தொலைக்க முகநூல் ஒரு
காரணமாக உள்ளது.

விமர்சனம்
மனிதர்கள் நாள்முழுவதும் தங்களுடைய நேரங்களை முகநூலில் வீணாக
செலவழிக்கின்றனர். தன் அருகில் இருப்பவரை நிமிர்ந்து பார்க்கக் கூட
நேரமில்லாதவர்களாக முகநூலில் மூழ்கி கிடக்கின்றனர்.

இன்றைய சூழ்நிலை

இன்றைய இளைஞர்கள் எப்பொழுதும் முகநூலிலேயே தங்களை
அடிமையாக்கிக் கொள்கின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்
நஞ்சு என்பதை இவர்கள் எண்ணுவதில்லை. இன்றைய இளைஞர்கள்
முகநூலில் காணப்படும் நன்மைகளையும் தீமைகளையும் அறிந்து
செயல்படுவதில்லை. விலை மதிப்பில்லாத இன்றைய இளைஞர்களின்
நேரங்கள் இன்று வீணாய்ப் போகின்றன. நேரங்கள் பொன் போன்றது
என்பதை இவர்கள் உணரவில்லை.

பாடம் - கவிக்குயில்.ஆர்.எஸ்.கலா



கவிதையின் பாடுபொருள்
வாழ்கையின் பயனை உணராமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதர்கள்.

விமர்சனம்
சுயநலமாக இருந்தால் மட்டுமே அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேர முடியும் என
முற்போக்கு சிந்தனை உள்ள மனிதர்கள். மற்றவர்களின் வாழ்க்கையின் நலன் கருதி
அவர்களுக்கு உதவி செய்யவதற்கு யாரும் முன் வருவதில்லை. பணத்தைத் தேடியே ஓடிக்
கொண்டிருக்கும் உலகம்.

இன்றைய சூழ்நிலை
காரியம் முடியும் வரை சுற்றிவருபவர்கள், அக்காரியம் முடிந்தப் பின்
கண்டுக்கொள்வதில்லை. ஒரு மதிப்பும் கொடுக்காதப் பணத்தை நோக்கி செல்வதில்
ஆர்வமாக இருக்கும் மனிதர்கள் உணர்வுகளை மதிக்கும் உறவில் ஆர்வம் காட்டுவதில்லை..

எங்கே சுதந்திரம் - கவிக்குயில்.ஆர்.எஸ்.கலா



கவிதையின் பாடுபொருள்
சுதந்திரம் நாட்டிற்கு மட்டுமே, ஆனால் தமிழர்களுக்கு இன்னும்
கிடைக்கவில்லை என்பதை பாடுபொருளாக கொண்டுள்ளது.

விமர்சனம்
சுதந்திரம் என்பது தமிழர்களைப் பொறுத்தவரைச் சுதந்திர தினத்தன்று
கொண்டாடப்படும் அவை ஒன்றே தவிர அவர்களின் வாழ்க்கையில் இல்லை.
ஒற்றுமையான நாடு என்றுக் கூறிக் கொள்கிறார்களே தவிர அது போல
வாழ்வதில்லை. தமிழர்களில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் ஒரு சிலரே.
இங்கு பணத்திற்கு மட்டுமே முதல் இடம்.

இன்றைய சூழ்நிலை

தமிழர்களைச் சமமாக நிகழ்த்துவதில்லை (புமிபுத்ரா). தமிழர்களில் வசதி
குறைவாக உள்ளவர்களுக்காக ஒதுக்கப்படும் பணம் அவர்களிடம்
சென்றடைவதில்லை. மலேசியாவில் நிகழும் கலவரங்கள் (BERSIH). உயர்ந்த
பதவியில் இருக்கும் அதிகாரிகளே பொறுப்பின்றி இருக்கும் சூழ்நிலை.

தனிமை - கவிக்குயில்.ஆர்.எஸ்.கலா




கவிதையின் பாடுபொருள்
இளைஞர்களின் சுயநலம் மற்றும் ஒழுக்கமின்மையால் கருவுற்றிருக்கும்
பெண்கள் எடுக்கும் முடிவினால் பாதிப்படையும் குழந்தைகள்.

விமர்சனம்

இந்தக் கவிதை அனாதையாக வளர்ந்த சிறுவனின் ஏக்கங்களை முன்
வைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஒரு அம்மாவின் பாசம் மற்றும்
அரவணைப்பு இன்றி வளரும் சிறுவன் இந்நிலைக்குத் தல்லப்படுகின்ற
காரணமே தெரியாமல் வளர்கிறான். ஆனால் இதற்கு காரணமாக
இருந்தவர்கள் இதை பெரிதாக கொள்வதில்லை.

இன்றைய சூழ்நிலை
பள்ளிப் பருவத்தில் பயிலும் மாணவர்கள் சரியான விழிப்புணர்ச்சி இல்லாத
காரணத்தினால் தவறான பாதைக்குத் தடம் மாறிச் செல்கின்றனர். புள்ளி
விவரம் படி தமிழ்ப் பெண் மாணவர்கள் சிறு வயதிலேயேக் கற்பமடைந்து
அதற்கு பொறுப்பேற்க முடியாத காரணத்தினால் அந்த குழந்தைகளை
வளர்க்க முன் வருவதில்லை
 

முதலாளித்துவத்தின் முதலீடு வளைந்து போய்விட்ட முதுகெலும்பு - கோ. புண்ணியவான்



மையக்கரு

தொழிலாளர்களின் மாறாத அடிமை வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு இக்கவிதைப் படைக்கப்பட்டுள்ளது.

விமர்சனம்

நூற்றாண்டுகள் பல கடந்தும் அடிமை வாழ்க்கை முறையில் மாற்றம் காணாத நிலையில் தொழிலாளர்கள். முன்னேற்றம் அடையாமல் கொட்ட கொட்ட குனியும் அவல நிலையில் வாழும் தொழிலாளர்களைப் பற்றி கவிஞர் இக்கவிதையின் மூலம் கூற விழைகிறார்.

இன்றைய சூழல்

இந்தியர்கள் பலர் இன்றும் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் தான்
இருக்கின்றனர். இன்னுமும் தோட்டப்புறங்களில் ரப்பர் மரம் வெட்டும் பணி
செய்யும் ஏழை தொழிலாளர்கள் இருந்தே வருகின்றனர்.
முதலாளிமார்களுக்கு காலதிற்கும் விசுவாசமான அடிமைகள் என்ற 
நிலையான முகமூடியைப் போட்ட வண்ணமே வாழ்ந்து வருகின்றனர்





ஓட்டு - கோ. புண்ணியவான்



மையக்கரு

ஒன்றைப் பகுத்தாராய்ந்து முடிவெடுக்க தவறும் மலேசியத் தமிழர்களை மையமாகக் கொண்டு இக்கவிதை படைக்கப்பட்டுள்ளது.

விமர்சனம்

நாட்டில் தாய் மொழியின் பயன்பாட்டை பற்றியக் கருத்தினை கவிஞர் இக்கவிதையில் பதிவு செய்துள்ளார். இந்து மதத்தையும் அதன் சமயக் குறிகளையும் அவமதிக்கும் செயல்களைப் பற்றியும் இக்கவிதை எடுத்துரைக்கின்றது. மேலும், மலேசியாவில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் நடந்த நிகழ்வொன்று மிகத் தெளிவாக இக்கவிதையில் கவிஞரால் கூறப்பட்டுள்ளது ஒரு வரலாற்றுப் பதிவாக விளங்குகின்றது.

இன்றைய சூழல்

இந்தியர்களில் பலர் தங்களின் ஓட்டுகளை சொற்சுவை மயக்கங்களினாலேயே போடுகின்றனர். இன்றும் இந்து கோயில்களில் கடவுள் சிலைகள் உடைக்கப்படும் செய்தியை நாம் கேட்கலாம். மக்களுக்கான பல சலுகைகள் சில பொறுப்பற்ற மேலிடத்தார்களால் சுரண்டப்பட்டே வருகின்றன.



நீ அண்ணாந்து பார் நான் செம்மாந்திருப்பேன் - கோ. புண்ணியவான்




மையக்கரு

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் சுயநலமிக்க முதலாளிமார்கள்.

விமர்சனம்

இக்கவிதை முதாலாளித்துவத்தின் கொடுமைகளைப் பற்றி நன்கு பறைச்சாற்றும் வண்ணம் கவிஞரால் இயற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் இத்தகைய அவலநிலை தங்களின் பிள்ளைகள் தொட்டு தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்ற கருத்தும் இக்கவிதையில் வெளிப்பட்டுள்ளது. அதாவது, தொழிளாலர்களின் பிள்ளைகளும்கூட இறுதிவரை தொழிலாளர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற முதலாளிமார்களின் எண்ணம்.

இன்றைய சூழல்

முதலாளிமார்களின் சுயநலமிக்க  கொடுமை செயல்கள் பல இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. எ.கா :- உள்ளூர் மற்றும் அந்நிய தொழிலாளர்களைக் கொடுமை செய்தல். உட்புறப்பகுதிகளில் பணிப்புரிவோர் இன்றும் முதலாளிகளால் கொடுமை செய்யப்பட்டு வருகின்றனர். ( கல்வியறிவு குறைவு ). வேலைக்கேற்ற ஊதியம் கொடுப்பதில்லை. ( 8 மணி நேர வேலை 12 மணி நேரத்திற்கு நீடிக்கலாம். ஆனால் சம்பளத்தில் பெரிய மாற்றமேதும் இருக்காத நிலை). உழைப்பை திருடும் நிலை. உழைப்புக்கேற்ற அங்கீகாரமும் இல்லை.