Thursday, October 6, 2016

நீ அண்ணாந்து பார் நான் செம்மாந்திருப்பேன் - கோ. புண்ணியவான்




மையக்கரு

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் சுயநலமிக்க முதலாளிமார்கள்.

விமர்சனம்

இக்கவிதை முதாலாளித்துவத்தின் கொடுமைகளைப் பற்றி நன்கு பறைச்சாற்றும் வண்ணம் கவிஞரால் இயற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் இத்தகைய அவலநிலை தங்களின் பிள்ளைகள் தொட்டு தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்ற கருத்தும் இக்கவிதையில் வெளிப்பட்டுள்ளது. அதாவது, தொழிளாலர்களின் பிள்ளைகளும்கூட இறுதிவரை தொழிலாளர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற முதலாளிமார்களின் எண்ணம்.

இன்றைய சூழல்

முதலாளிமார்களின் சுயநலமிக்க  கொடுமை செயல்கள் பல இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. எ.கா :- உள்ளூர் மற்றும் அந்நிய தொழிலாளர்களைக் கொடுமை செய்தல். உட்புறப்பகுதிகளில் பணிப்புரிவோர் இன்றும் முதலாளிகளால் கொடுமை செய்யப்பட்டு வருகின்றனர். ( கல்வியறிவு குறைவு ). வேலைக்கேற்ற ஊதியம் கொடுப்பதில்லை. ( 8 மணி நேர வேலை 12 மணி நேரத்திற்கு நீடிக்கலாம். ஆனால் சம்பளத்தில் பெரிய மாற்றமேதும் இருக்காத நிலை). உழைப்பை திருடும் நிலை. உழைப்புக்கேற்ற அங்கீகாரமும் இல்லை.



No comments:

Post a Comment