Thursday, October 6, 2016

மன்னித்தேன் தோழா - ந.பச்சைபாலன்





கவிதையின் பாடுபொருள்
இக்கவிதை ஒருவரின் மன்னிக்கும் குணத்தைக் கருவாகக் கொண்டுள்ளது.

கவிதையின் விமர்சனம்

மற்றொருவன் தனக்குப் பல கொடுமைகளைச் செய்திருந்தாலும் அதனைப் பெரிதாகக் கருதி அவனைத் தண்டிக்க எண்ணாமல் மன்னித்துவிடத் தயாராக இருக்கும் ஒருவனின் மனதை கவிஞர் இக்கவிதையில் வலியுறுத்தியுள்ளார். ஒருவன் கஷ்டத்தில் இருந்து கண்ணீர் விடும்பொழுது அதனைப்பார்த்து ஆனந்தம் அடையவும், வெற்றியடைந்தால் பார்த்து பொறாமைப்படவும் செய்கிறான் அவனை சுற்றியுள்ள நண்பன். இவை அனைத்தும் அவன் தானாகச் செய்யவில்லை. அவனுடைய அறியாமை, ஆணவம், கெட்ட எண்ணங்கள் அனைத்தும் அதற்கு துணையாக இருந்தது. எதுவாக இருந்தாலும், அவன் செய்த அனைத்து கொடுமைகளையும் மன்னிக்கப்படுகின்றன.

இன்றைய சூழல்
இன்றைய சூழலிலும் தவறுகள் செய்யும் மனிதர்களும் அதனை பெருந்தன்மையோடு மன்னிக்கும் மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர். அடுத்தவர்களின் வெற்றியைக் கண்டு சந்தோஷப்படாமல் பொறாமைப்படும் மனிதர்கள் தான் இப்பொழுது அதிகமாக உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல், தங்களுடைய வேலைகளில் கவனம் செலுத்தாமல் அடுத்தவர்களை முன்னேறவிடாமல் தடுப்பதற்குப் பாடுப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்கள் தற்பொழுது அதிகம். அதோடு, மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதில் முதலாளாகவும்  இருக்கின்றார்கள். இவ்வாறான போக்குகளுடைய மனிதர்கள் சிலர் இருந்தாலும், இவர்களைப் பெருந்தன்மையுடன் மன்னித்து தன்னுடைய வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்குச் செல்லத் தயாராக இருக்கும் மனிதர்கள் சிலர் இப்புவியில் இருக்கவே செய்கின்றார்கள்.

No comments:

Post a Comment