Wednesday, October 5, 2016

மரநானூறு - ந.பச்சைபாலன்




கவிதையின் பாடுபொருள்
இக்கவிதையானது தோட்டப்புறத்தில் வாழும் ஒரு தந்தையின் தியாகத்தை மையமாகக் கொண்டுள்ளது.

கவிதையின் விமர்சனம்
தோட்டப்புறத்தில் வாழ்ந்து கொண்டு குடும்பத்திற்காக உழைப்பதை தன்னுடைய சந்தோஷமாகவும், எவ்வளவு உழைத்தாலும் சோர்ந்துப் போகாமல் அச்சுமையை சுகமாகவும் கருதும் ஒரு தந்தையைப் பற்றி கவிஞர் இக்கவிதையில் வலியுறுத்தியுள்ளார். அப்பாக்கள் எப்போதுமே தாயுமானவர்கள்தான். தனக்கு கல்வியறிவு இல்லையென்றாலும், தங்கள் பிள்ளைகள் கல்வியறிவு பெற்றிட வேண்டும் என்பதற்காக உழைப்பவர்கள். அவர்களின் உயரத்தைத் தங்களுடைய பிள்ளைகள் தாண்டிச் செல்ல பல கனவுகளைச் சுமந்துக்கொண்டிருப்பவர்கள். அதுமட்டுமல்லாமல், பிள்ளைகளின் முன்னேற்றத்திற்குத் தூண்களாக இருப்பவர்கள்.

இன்றைய சூழல்
தற்போதைய சூழலிலும் இன்னும் சிலர் தோட்டப்புறங்களில் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவ்வாறு வாழ்ந்துக் கொண்டிருக்கும் குடும்பத்தில் இருக்கும் தந்தைமார்கள் பலர் தங்களுடையத் தொழிலை ஒருபொழுதும் சுமையாகக் கருதியதில்லை. தங்களின் குடும்பத்திற்காகவும் பிள்ளைகளின் கல்வியறிவிற்காகவும் அயராது உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களைக் காட்டிலும் தங்களுடைய பிள்ளைகள் உயரத்தில் இருக்க வேண்டும் என்று பல கனவுகளைச் சுமந்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், பல தியாகங்களைச் செய்து பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கு வேர்களாய் இருந்துக் கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment