பாடுப்பொருள்
இன்றைய
மனிதர்கள் அணியும் அரைக்குறை ஆடைகளை
மையமாகக்
கொண்டு படைக்கப்பட்டுள்ளது.
விமர்சனம்
ஆதிக்காலத்தில் மனிதர்கள் உடுத்துவதற்கு ஆடைகள் இல்லாமல்
இருந்தனர். பின்
இலைகளைக் கொண்டு தங்கள் உடலை மறைத்து
மானம்காத்தனர். அதனைத்
தொடர்ந்து விதவிதமான ஆடைகள்
தயாரிக்கப்பட்டன. ஒரு
விவசாயிக்குக் கூட ஒரு கோமணம்தான் முழு
உடையாக இருந்தது. சேலையை
மடித்து கட்டி சேற்றில் இறங்கி வேலை
செய்யும் பெண்களை எவரும் ஆபாசக் கண்களோடு பார்ப்பதில்லை.
ஆனால்,
சினிமாவிலோ பணத்தைக் கூட்டுவதற்கு தங்களின் ஆடைகளைக்
குறைத்து கொள்கின்றனர்.
இன்றைய சூழல்
சினிமாவில்
மட்டுமில்லாமல் நடைமுறை வாழ்க்கையில் கூட பெண்கள்
அரைக்குறை ஆடைகளை அணிகின்றனர். பெண்கள்
அணியும் ஆடைகள்
அரைக்குறையாக இருந்தால் மட்டுமே அழகு என்று கருதுகின்றனர்.
இன்றைய
காலத்து பெண்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான
சேலையைக் கூட ஆபாசமாக அணிகின்றனர்.
No comments:
Post a Comment