Thursday, October 6, 2016

மனித நேயம் இல்லா மனிதர்கள் - கவிக்குயில் ஆர். எஸ். கலா



பாடுப்பொருள் 
மனித நேயம் இல்லாமல் நடந்துக் கொள்ளும் மனிதர்கள் மையமாகக்
கொண்டு படைக்கப்பட்டுள்ளது.

விமர்சனம் 
மற்றவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், உபத்திரம் செய்யக் கூடாது என
கூறுவார்கள்.  ஆபத்தில் துடிக்கும் உயிருக்கு உதவி செய்யாமல் 
தன்னுடைய சுயநலத்திற்காக செயல்படுகின்ற சமுதாயமாகத் 
திகழ்கின்றது. பேச்சில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனும் காலம் கடந்து
இப்போது அதனை செயலில் காட்டுகின்றனர். மனிதர்களுக்கும் 
மிருகங்களுக்கும் வேறுபாடு இல்லாதவர்களாக உருவாகி வருகின்றனர்.

இன்றைய சூழல் 
முகநூல் (காணொலியைப் பதிவு செய்தல்). குண்டர் கும்பலில்
இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு மூல
காரணம் பெற்றோர்கள், நண்பர்கள், குடும்ப சூழ்நிலை. இதுப்போன்ற 
இளைஞர்களுக்கு அறிவுரைக் கூற எவரும் முன் வரவில்லை.


No comments:

Post a Comment