Thursday, October 6, 2016

காதலும் காமமும் - கவிக்குயில் ஆர். எஸ். கலா




பாடுப்பொருள் 
இன்றைய இளைஞர்களுக்குக் காதலுக்கும் காமத்துக்கும் வேறுபாடு
தெரியாமல் இருப்பதை இக்கவிதை மையமாகக் கொண்டுள்ளது.

விமர்சனம் 

ஒருவரை மட்டுமே நினைப்பது காதல், ஒருவருக்கும் மேலே நினைப்பது
காமம் எனும் வேறுபாட்டைப் புலப்படுத்துகிறது. இளம் வயதில் ஏற்படும்
உணர்வுகளைக் காமம் என்றும் நன்கு அறிந்த வயதில் ஏற்படும்
உணர்வுகளைக் காதல் என்றும் இக்கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்காலத்தில் காதலை விட காம உணர்வு அதிகமாகக் காணப்படுகிறது.
இதன் விளைவாகவே “AIDS” எனும் கொடிய நோய் பரவலாகி
கொண்டிருக்கிறது.

இன்றைய சூழல் 
இடைநிலைப்பள்ளிகளில் பாடவேளையின் போது வகுப்பறையில் 
மாணவர்கள் காதல் எனும் பெயரில் செய்யும் அட்டூழியங்கள் பரவலாகக்
காணப்படுகின்றன. இளம்வயதிலே ஒரு பெண் தன் மனதை ஓர்
ஆடவனிடம் பரிக்கொடுத்து பின்னர் தன் கற்பையே பரிக்கொடுக்கிறாள்.
இதை தெய்வீக காதல் எனக் கூறுகிறார்கள். வழித்தவறி பெற்ற
குழந்தைகளைக் கொஞ்சம் கூட இரக்கமின்றி குப்பை தொட்டியில் தூக்கி
எறிகின்றார்கள்

No comments:

Post a Comment