கவிதையின்
பாடுபொருள்
இக்கவிதைப் பணத்தின்
முக்கியத்துவத்தை மையமாகக்
கொண்டுள்ளது.
கவிதையின்
விமர்சனம்
பணமின்றி
இந்த உலகத்தில் எதுவுமில்லை என்பதனை கவிஞர் இக்கவிதையின் மூலம்
எடுத்துக்கூறியுள்ளார். பணத்தின்
முக்கியத்துவம் அதிகமாக உள்ளது. மனிதர்கள் அன்றாடம் உண்ணும் உணவு, அணியும் உடை,
வசிக்கும் இடம் அனைத்திலும் பணத்தின் பயன்பாடு உள்ளது. கடவுளை
நெருங்குவதற்குக்கூடப் பணம்தான் தேவைப்படுகின்றது. சில இடங்களில் பணம்
கொடுக்கவில்லை என்றால் வேலை வாய்ப்புக்கூடக் கொடுக்கப்படுவதில்லை.
அதுமட்டுமல்லாமல், தேர்தலில் போடப்படும் ஒவ்வொரு வாக்குக்கும் இடத்திற்கு ஏற்றவாறு விலை நிர்ணயம்
செய்யப்படுகின்றது. சுருக்கமாகச் சொல்லப்போனால், இவ்வுலகம் நீரின்றிகூட நகரும்,
ஆனால் பணமின்றிச் செயல்படாது.
இன்றைய
சூழல்
இன்றைய
நிலையில், பணத்தின் பயன்பாடு அதிகமாகக் கூடியுள்ளது. பணமின்றி
எதுவும் இயங்காது என்ற ஒரு நிலை இப்பொழுது ஏற்பட்டுவிட்டது. பணம் என்னும்
கருவிதான் ஒரு அரசாங்கத்தை உருவாக்கவும் செய்கிறது. மற்றொரு அரசாங்கத்தை
வீழ்த்தவும் செய்கிறது. பணத்தின் தேவையென்பது
ஒரு குழந்தைப் பிறக்கும்போதே
தொடங்கிவிடுகின்றது. மேலும்,
இன்றைய நிலையில் மனிதன் பிறந்தது முதல் இறக்கின்றவரை,
இறந்தபின் புதைப்பதோ அல்லது எரிப்பதோ வரை
பணம் தன்னுடைய அத்தியாவசியத்தை ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு நிகழ்விலும்
மனிதனுக்கு உணர்த்திக் கொண்டேதான் இருக்கின்றது.
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
ஆனால் பணம் இல்லையாயின் யாருக்கும் உன்னைத் தெரியாது
என்ற நிலையில்தான் உலகம் இன்று நகர்ந்துக் கொண்டிருக்கின்றது.
No comments:
Post a Comment