Tuesday, October 4, 2016

விடியலை நோக்கி - சு. விநாயகமுருகன்



கவிதைக் கரு
இன்றைய தலைமுறையினர்கள் வாழ்வில் வெற்றி பெற சாதனைகள்   செய்ய வேண்டும் என்பது இக்கவிதையின் கருவாகும்.
விமர்சனம்

போட்டி நிறைந்த இவ்வுலகில் சாதனை செய்ய நாம் விடாமுயற்சியுடன்   செயல்பட வேண்டும் என்று கவிஞர் வலியுறுத்துகின்றார். ஆர்வமுள்ள   விஷ்யத்தில் சாதனை  செய்ய அறிவைக்கொண்டு ஈடுபட வேண்டும்.   சோதனைகள் வந்தாலும், நேர்மையுடனும் தன்னம்பிக்கையுடனும்    எடுத்த காரியத்தில் சாதனை செய்ய வேண்டும். என்னால் முடியும்   என்பதை எப்பொழுதும் மறந்திடக்கூடாது.

இன்றைய சூழல்
இன்றைய தலைமுறையினர்கள் வாழ்க்கையில் சாதனை செய்ய   எந்தவொரு முயற்சியும் செய்வதில்லை. ஆர்வமின்றி   காணப்படுகிறார்கள். தோல்வியைச் சந்தித்தவுடன்    துவண்டுவிடுகிறார்கள். அடுத்த முயற்சி எடுப்பதில்   தயங்குகிறார்கள். ஆகவே, வாழ்க்கையில் சாதனை செய்ய   எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்ககூடாது. மேலும்,   தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது. எப்பொழுதும்   தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவதே சிறப்பு.

No comments:

Post a Comment