Tuesday, October 4, 2016

தேடுதல் - இரா.சரவண தீர்த்தா



கவிதைக் கரு

இந்தக் கவிதை இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையை மையமாக கொண்டது.

விமர்சனம்

குடும்பத்தைவிட வேலையில் அதிக நேரம் செலவிடும் தந்தையைப்   பற்றி   கவிஞர்  இந்தக் கவிதையில் வலியுறுத்துகிறார். அதிக   நேரத்தை வேலையிலும்   பணத்தைத் தேடுவதிலும்   செலவிடுவதால்,   குடும்ப   உறுபினர்களிடையே   உள்ள உறவு   பலவினமாகிறது.   பிள்ளை மற்றும்   மனைவி அழைத்தும் பதில்   சொல்ல முடியாத   நிலையில் வேலைக்குச்   செல்வது இன்றைய    தந்தைமார்களின்   நிலை என்று   கவிஞர்   குறிப்பிடுகிறார்.   கவிதையின் இறுதி   வரியில்தேடாததை தொலைத்து விட்டு ” ,   அதாவது  நேரத்தைத்   தொலைத்ததாக குறிப்பிடுகிறார்.

இன்றைய சூழல்
கவிதையில் குறிப்பிட்டது போல், இன்று அனைவரின்   வீட்டிலும் இதே நிலவரம்தான். பெற்றோர்கள் குடும்ப   பொருளாதாரதிற்காக இரவு பகல் எனப் பாராமல்   உழைக்கின்றார்கள். இவ்வாறு உழைப்பதால், போதுவான   நேரம் பிள்ளைகளுடன் முறையாகச் செலவிட முடிவதில்லை.   இதனால், உறவுகள் பலவினமாகிறது. இதன் விளைவு,   பிள்ளைகள் தவறான வழிக்குச் செல்ல வாய்ப்புகள் உண்டு.   பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றதுஆகவே,   பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு,   பெற்றோர்கள் குடும்பத்தாருடன் நேரத்தை ஒதுக்குவதே சிறந்த   வழியாகும்.
  

No comments:

Post a Comment